ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "விளையாட்டு விழா"

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "விளையாட்டு விழா" இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலால்வரித்துறையின் ஆய்வாளர் மற்றும் தமிழக தடகள விளையாட்டு அமைப்பின் பொருளாளர் சி.லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்; விளையாட்டு வீரராக வருவதற்கு வயது தடையில்லை. எந்த வயதிலும் விளையாட்டில் நுழைய முடியும். விளையாட்டு ஒழுக்கத்தினை, கட்டுப்பாட்டினை கற்றுக் கொடுக்கும். அதுமட்டுமின்றி பல்வேறு வாய்ப்புகளை நமக்கு அளிக்கும். இளைஞர்கள் விளையாட்டுத் திறனை வளர்க்க வேண்டும். உடல், மன ஆரோக்கியதிற்க்கு விளையாட்டு பெரிதும் உதவும். கல்வி நிறுவனங்கள் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. எத்துறையிலும் சாதனை புரிய விளையாட்டு முக்கிய பங்கினை வகிக்கின்றன. அதேபோல பல்வேறு வேலை வாய்ப்பினையும் கொடுக்கின்றது எனக் கூறினார்.

இவ்விழாவில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவம் செயப்பட்டனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், இவ்வாண்டு விளையாட்டுக்கான மொத்த சாம்பியன் பட்டத்தினை பி.பி.ஏ(சி.ஏ) துறையும், இரண்டாம் இடத்தினை பி.எஸ்.சி(சி.எஸ்) துறையும் பெற்று சுழற்கோப்பையினை பெற்றனர். தடகள விளையாட்டில் பி.காம் துறை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இதில், கோவை மாவட்ட தடகள விளையாட்டுப் பயிற்சியாளர் சீனிவாசன், கல்லூரி முதல்வர் பாபாஞானக்குமார், விளையாட்டுத் துறையின் இயக்குநர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...